india

img

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு - 4 பேர் பலி 

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபர் பகுதியில் நேற்றிரவு மேக வெடிப்பு ஏற்பட்டது . இதனால் தொடர்ந்து கனமழை பெய்தது . இதில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு  பேர் உயிரிழந்தனர் . அவர்கள் , முஹம்மது தாரிக் காரி(8) , ஷஹன்ஸா பேகம் (30) , நசியா அக்தர் (14) , ஆரிப் ஹுசைன் காரி(5) என்பது தெரியவந்துள்ளது. மேலும், ஒருவர் மாயமாகியுள்ளார். மாயமான 80 வயது மிதக்கத்தக்க முதியவரான முகம்மது பஷீர் காரி என்ற நபரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். 

;